News September 28, 2024

காவலரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

image

பனையபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து மறைந்த காவலர் இளங்கோவன் குடும்பத்தினருக்கு காக்கும் கரங்கள் சார்பில் நிவாரண உதவி அளிக்கப்பட்டது. ரூ.15.98 லட்சம் பணத்திற்கான காசோலையை இளங்கோவன் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். பின்னர், உதவி செய்த சக காவலர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Similar News

News November 7, 2025

புதுகை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 7, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு!

image

புதுகை மாவட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

புதுகை: 150 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு!

image

பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 150 கிலோ புகையிலை பொருட்களை நீதிமன்ற உத்தரவுபடி நேற்று தேனூர்- தேனி கண்மாய் அருகே பொன் னமராவதி தாசில்தார் சாந்தா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!