News September 28, 2024

கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News December 26, 2025

கடலூர்: போதை பொருள் விற்ற 2 பேர் அதிரடி கைது!

image

கடலூர் மாவட்டம், முதுநகரில் போலீசார் கடந்த டிச.24-ம் தேதி நடத்திய சோதனையில், 21 கிலோ கஞ்சா, 130 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தீபக் (25), சிவக்குமார் (24) உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தீபக் மற்றும் சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News December 26, 2025

கடலூர்: போட்டித் தேர்வுக்கு பயிற்றுநர்கள் தேர்வு

image

அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளிலில் பல்வேறு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக சிறந்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் சுயவிவரத்துடன் வருகிற 31.12.2025-க்குள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்யர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

கடலூர்: பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்

image

கடலூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). இவர் 17 வயது சிறுமி ஒருவரை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்ற நிலையில், அவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் மோகன்ராஜை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!