News September 28, 2024
என்கவுண்டர் விவகாரத்தில் அதிரடி உத்தரவு

மதுரையில் கடந்த 2010 இல் முருகன் (எ) கல்லு மண்டையனை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து 6 மாதத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாய் குருவம்மாள் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
மதுரை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

மதுரை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் <
News August 18, 2025
மதுரை: கம்மியான விலையில் பைக், கார் வேண்டுமா.!

மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆக.25 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. ஏலதாரர்கள் மதுவிலக்கு பிரிவில் வாகனங்களை பார்வையிட்டு முன் பணமாக டூவீலருக்கு ரூ.5000, 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை ஆக.18 முதல் 22 வரை செலுத்தி ரசீது பெறலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கோரவேண்டும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.யாருக்காவது உதவும்.
News August 18, 2025
மதுரை மாநகர் காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்

மதுரை மாநகர் காவல் துறையின் இன்று ஆக.17, இரவு நேர ரோந்து பணி செல்லும் காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.