News September 28, 2024

ALERT: கனமழை கொட்டித்தீர்க்கும்

image

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்றும், கோவை, நீலகிரி, தேனி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளையும், நீலகிரி, விருதுநகர், நெல்லை, குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

Similar News

News November 5, 2025

கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

image

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால், நவ.5,6,7,8 ஆகிய தேதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

News November 5, 2025

ஹரியானாவில் 22 ஓட்டுகள் போட்ட பிரேசில் மாடல்

image

ஹரியானா தேர்தலில் பிரேசிலை சேர்ந்த மாடல், ’சரஸ்வதி, ரஷ்மி, ஸ்வீட்டி’ என 22 பெயர்களில் வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது எப்படி நடந்தது என கேள்வி எழுப்பிய அவர், ஆபரேஷன் ஆட்சி திருட்டு என்ற பெயரில் காங்கிரஸின் பிரமாண்ட வெற்றியை தோல்வியாக பாஜக மாற்றியதாக சாடியுள்ளார். மேலும், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

News November 5, 2025

கிரிசில்டா மிரட்டி திருமணம் செய்யவைத்தார்: ரங்கராஜ்

image

ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டியதால் அவரை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார். கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாக மகளிர் ஆணையத்தில் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்ற அவர், ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், DNA சோதனையில் குழந்தை தன்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.

error: Content is protected !!