News September 28, 2024

இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க இங்கிலாந்து ஆதரவு

image

ஐ.நா சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய அவர், “ஐ.நாவின் அனைத்து அமைப்புகளும் சீர்திருத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு அவை முடக்கப்படக்கூடாது. பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 14, 2025

பிஹாரில் திடீர் ட்விஸ்ட்

image

பிஹாரில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2020 உடன் ஒப்பிடுகையில் சுமார் 39 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் சூழல் உருவாகிருப்பதால், நிதிஷின் கரம் அங்கு இன்றளவும் வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஜேடியு பின்னடைவை சந்தித்த நிலையில், நிதிஷ் CM வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது கடினமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரம் பெரும் ட்விஸ்ட் தான்.

News November 14, 2025

BREAKING: தேர்தல் முடிவில் பெரும் பின்னடைவு

image

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையில் இருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. MGB கூட்டணியும் 85 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று டப் பைட் கொடுத்து வந்த நிலையில், தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி NDA 191 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB வெறும் 49 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

News November 14, 2025

தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

image

RJD தலைவரும், MGB கூட்டணியின் CM வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் 1,273 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 3-வது சுற்று முடிவில் தேஜஸ்வி 10,957 வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம், பாஜகவின் சதிஷ்குமார் யாதவ் 12,230 வாக்குகள் பெற்றுள்ளார். 30 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!