News September 28, 2024
நாய் வளர்க்கிறீர்களா? தமிழக அரசு எச்சரிக்கை

நாய்கள் வளர்ப்பு, இனப்பெருக்கத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், *நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெற வேண்டும் *இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் *வாலை நறுக்குதல், காதுகளை வெட்டுதல், நகங்களை அகற்றுதல் போன்றவற்றை செய்யக்கூடாது * நாயின் தோற்றத்தை செயற்கையாக மாற்றக்கூடாது என ஆணையிட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும்.. HAPPY NEWS

9 – 12-ம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு பன்முகத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைப்பட்டறையை அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் போதை எதிர்ப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
News August 20, 2025
மற்றொரு திசைத் திருப்பும் முயற்சியா?

எப்போதெல்லாம் அரசுகளுக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய சர்ச்சை உருவாக்கப்படும் என்பார்கள். தற்போது வாக்காளர் பட்டியல் சர்ச்சையை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளன. ராகுலும் ‘வோட் அதிகார்’ பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ‘<<17462799>>PM, CM<<>> பதவிபறிப்பு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதா என சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News August 20, 2025
தனியாருக்கு தூய்மைப் பணிகள்: HC முக்கிய உத்தரவு

சென்னை மாநகராட்சியில் (GCC) தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த HC, மண்டலம் 5, 6-ல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான GCC தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது. இதற்காக போராட்டமும் நடைபெற்றது.