News September 28, 2024
IPL 2025 : போட்டிகளின் எண்ணிக்கை உயருமா?

IPL 2025 தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 84ஆக உயர்த்தப்படாது என்று BCCI செயலாளர் ஜெய்ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். 10 அணிகள் இடையிலான IPL கிரிக்கெட்டில் கடந்த சீசனில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடந்தன. இது 2025இல் 84ஆக மேலும் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த ஜெய்ஷா, “இந்திய வீரர்களின் பணிச்சுமையை பார்க்க வேண்டியுள்ளது. 84 ஆட்டங்கள் என்பது ஒப்பந்தத்தில் உள்ளது தான்” என்றார்.
Similar News
News December 6, 2025
டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.
News December 6, 2025
ஒரு சமூகம் முன்னேற கல்வியே அடிப்படை: CM

மாணவர்கள் மேல் எந்த அளவுக்கு திமுக அரசுக்கு அக்கறை உள்ளது என்பதற்கு, சமூகநீதி விடுதிகளே சாட்சி என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், ஒரு சமூகம் முன்னேற கல்வியே அடிப்படை என்று குறிப்பிட்டார். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளையும் படிக்க வேண்டும் என்று கூறிய அவர், அரசு திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடைவதற்காக கடுமையாக உழைப்பதாக தெரிவித்தார்.
News December 6, 2025
திமுக அரசு பதற்றத்தை உருவாக்குகிறது: G.K.வாசன்

மத நம்பிக்கை உடையவர்களால் எந்த பதற்றமும் ஏற்படாது, அவர்களின் ஒரே குறிக்கோள் முறையான வழிபாடு மட்டுமே என G.K.வாசன் கூறியுள்ளார். ஆனால் பதற்றம் ஏற்படுவதாக கூறி திமுக நடுநிலைமையோடு செயல்படவில்லை என்ற அவர், தேர்தல் காரணமாகவே அவர்கள் இவ்வாறு நடப்பதாக மக்களே சந்தேதிக்கின்றனர் எனவும் பேசியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் அரசே செயற்கையாக ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


