News September 28, 2024
போதை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மொத்தம் 41 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வோரு கடைகளுக்கும் ரூ 25,000 விதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு தொடர்ந்து மாவட்டம் முழுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கும் என துறையை சார்ந்த அதிகரிக்க தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 1, 2025
விழுப்புரத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று (செப்.1) பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களாகச் சமர்ப்பித்து நிவர்த்தி பெறலாம். மேலும், இந்தக் கூட்டத்தில் அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 31, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டம் மாவட்டத்தில் இன்று(ஆக.31) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
“திண்டிவனம் சிறுமி சாதனை படைத்துள்ளார்.”

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த சிறுமி மித்ரா, 54 சர்வதேச நிறுவனங்களின் லோகோக்களை பார்த்து அவற்றின் பெயர்களை 27 நிமிடங்களில் கூறி, உலக சாதனைப் புத்தகமான “வோல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்”இல் இடம்பிடித்துள்ளார். மிகக் குறைந்த வயதிலேயே பெற்றுள்ள இச்சாதனை, திண்டிவனம் மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. குடும்பத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.