News September 28, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு மாவட்டத்தில் மூன்றாண்டு பணி நிறைவு செய்த 24 தனிப்பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் ஆணையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணி புரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்கள் விரைவில் பணியமத்தப்படுவார்கள்.

Similar News

News October 26, 2025

விழுப்புரம்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

விழுப்புரம் மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர்

News October 26, 2025

விழுப்புரம்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்.<<>>

News October 26, 2025

விழுப்புரத்தில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு: ஆட்சியர் தகவல்

image

விழுப்புரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு அக்.28ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலம்மாள் வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 8925534035/9443728015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!