News September 28, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

image

தாம்பரம் மாநகராட்சி இன்று (27.09.2024) தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து சேவைத்துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News

News August 19, 2025

ரூ.2.5 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த பெண் தற்கொலை

image

தாம்பரம், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த வனஜா (38) யூடியூபில் பார்த்து, கணவருக்குத் தெரியாமல் ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கடன் செயலியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் கொடுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அவர், வாட்ஸ்அப் மூலம் கணவருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News August 19, 2025

செங்கல்பட்டு: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

செங்கல்பட்டு மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT

News August 18, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!