News September 27, 2024

நீங்க அன்னூரா, ஜாக்கிரதையா இருங்க

image

அன்னூர் முதல், கரியாம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட எல்லப்பாளையம் -துணை மின் நிலைய வளாகத்தில், இன்று மூன்று அடி உயரம் கொண்ட சிறுத்தை புகுந்துள்ளதாகவும், தற்போது இருள் சூழ்ந்துள்ளதால் அவை எங்கு உள்ளது என தென்படவில்லை எனவும் இந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் இன்று வெளிவருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News August 14, 2025

கோவையில் ₹1.65 லட்சம் மானியம் கலெக்டர் அறிவிப்பு

image

கோவை மக்களே சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மானியமாக ரூ.1,65,625/ வழங்கப்படும். இதற்கு தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெறலாம் என என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமாா் தெரிவித்துள்ளார்.(SHARE பண்ணுங்க)

News August 14, 2025

வேரில் உதித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்

image

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த 55 வயது யூ.எம்.டி. ராஜா, காந்திபுரத்தில் நகை பட்டறை நடத்தி வரும் ஒரு கலைஞர். இவர், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு மரத்தின் ஆணிவேரைக் கொண்டு, அதில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட 20 முக்கியத் தலைவர்களின் உருவப்படங்களை மிக நுட்பமாகச் செதுக்கியுள்ளார்.

News August 14, 2025

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

image

கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ராஜன் குமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி அதிகப்படியான பணத்தை இழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளான அவர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!