News September 27, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/09/2024) கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பணி இடை மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த ஆ.எல்லப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் இன்று உத்தரவிட்டுள்ளார். இவருக்கு பதிலாக அரியலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரமேஷ் கடலூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 4, 2025

கடலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 4, 2025

கடலூர்: வாக்காளர்களுக்கு சிறப்பு எண்கள் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிஞ்சிப்பாடி 04142-258901, புவனகிரி 04144-240299, சிதம்பரம் 04144-227866, காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி- 04144-262053 என்ற எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!