News September 27, 2024
55,000 ஆசிரியர்களுக்கு விரைவில் டேப்லெட்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கையடக்கக் கணினி (TAB) வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு TAB வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக 79,723 பேருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 55,478 பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News January 19, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 19, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 585 ▶குறள்: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று ▶பொருள்: ஒரு உளவாளி என்பவன், மற்றவர்களின் மனதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாத தோற்றத்துடன், சந்தேகப்பட்டு பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், தனது நோக்கத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாதவனாகவும் இருப்பான்.
News January 19, 2026
‘அமைதி வாரியத்தில்’ சேர இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு!

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் நிர்வாகம் மற்றும் மறுகட்டமைப்பை மேற்பார்வையிட அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. தனித்தனியான 11 உறுப்பினர்களை கொண்ட காசா நிர்வாக வாரியத்தின் தலைவராக டிரம்ப் இருப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மறுபுறம், அமைதி வாரியத்தில் சேர டிரம்பிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


