News September 27, 2024
போர் பீதி: லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு அட்வைஸ்

போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், லெபனானில் உள்ள இந்தியர்களை வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து எந்நேரமும் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போர் அபாயம் நிலவுவதை கருத்தில் கொண்டு, லெபனானில் உள்ள 12,000 இந்தியர்களை கப்பல்கள், விமானங்களில் நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.
Similar News
News August 13, 2025
ED விசாரணை வளையத்தில் சுரேஷ் ரெய்னா

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 1XBet என்ற சூதாட்ட செயலி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் ED, அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள ED அலுவலகத்தில் இன்று ரெய்னா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
News August 13, 2025
முதுகு, கழுத்துக்கு வலு சேர்க்கும் பிட்டிலாசனம்!

✦செரிமானத்தை தூண்டி, மார்பு மற்றும் தோள்பட்டைகளை விரிவடையச் செய்கிறது.
✦தரையில் முழங்காலிட்டு கைகளை தோள்பட்டைக்கு நேராக தரையில் வைக்கவும்.
➥மூச்சை உள்ளே இழுத்து, முதுகை வளைத்து, மார்பை முன்னோக்கி நீட்டி, தலையை உயர்த்தி, மேலே பார்க்கவும்.
➥மூச்சை வெளியே விடும்போது, முதுகை வில் போல வளைத்து, தலையை குனிந்து, வயிற்றை உள்ளிழுக்கவும்.
News August 13, 2025
விஜயகாந்த் Photoவை விஜய் பயன்படுத்தலாம்.. பிரேமலதா

தேமுதிகவை தவிர யாரும் விஜயகாந்த் Photo-வை பயன்படுத்தக்கூடாது; கூட்டணி கட்சிகள் மட்டுமே தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மானசீக குரு விஜயகாந்த் என தெரிவித்தால், போட்டோவை விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா நேரடியாக அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த திடீர் மனம் மாற்றத்திற்கு கூட்டணி கணக்குதான் காரணம் என சொல்லப்படுகிறது.