News September 27, 2024
சைபர் குற்றம்: பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் நிதி, முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்களை பகிர வேண்டாமென்று சைபர் கிரைம் பிரிவு போலீஸ் எச்சரித்துள்ளது. சைபர் மோசடியை சுட்டிக்காட்டி பொதுமக்களுக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், மின்னஞ்சல் லிங்குகளை கிளிக் செய்யும் முன்பும், பதிவிறக்கம் செய்யும் முன்பும் அதன் சட்டப்பூர்வ நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். ரகசியத் தகவல்களை அளித்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News August 13, 2025
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் முயற்சியின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ₹10.32 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் போதிய இடவசதி கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் IT பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
News August 13, 2025
கவர்ச்சி கேரக்டர்களுக்கே அழைக்கிறார்கள்: பூஜா

இந்தி சினிமாவில் தன்னை கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பதாக நடிகை பூஜா ஹெக்டே வேதனை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தான் நடித்த படங்களை அவர்கள் பார்க்கவில்லை என தான் நினைப்பதாகவும் கூறினார். ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரமாக தன்னை மாற்றிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
News August 13, 2025
சின்னசாமி மைதானத்துக்கு தொடரும் சோதனைகள்

செப்.30-ம் தேதி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் துவங்குகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இத்தொடரின் போட்டிகளை திருவனந்தபுரத்திற்கு மாற்ற BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல்துறை அனுமதியை பெற கர்நாடக கிரிக்கெட் சங்கம் தவறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.