News September 26, 2024

கருவிழி அடிப்படையில் பொருள்கள் விநியோகம்

image

தமிழகத்தில் 10,000 பகுதி நேர நியாய விலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில், பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 3 லட்சம் பேர் குடும்ப அட்டைக் கோரி விண்ணப்பித்ததாகவும், 1.5 லட்சம் பேருக்கு சரிபார்க்கும் பணி நிறைவடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 40 மாத திமுக ஆட்சியில் 16 லட்சம் நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

30 வயதை கடந்த பெண்களே.. இத கவனியுங்க!

image

பெண்கள் 30 வயதை அடைந்து விட்டால், இந்த டெஸ்ட்டுகளை செய்து கொள்வது அவசியம்.
➤Mammography: மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
➤Thyroid Test: எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் ஆகியவற்றை கண்டறிய உதவும் டெஸ்ட்.
➤Pap Smear test: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய உதவும்.
➤Complete blood count (CBC): ரத்த சோகை குறித்து அறிந்து கொள்ள, இந்த டெஸ்ட் செய்யுங்கள். SHARE IT.

News August 12, 2025

‘தாயுமானவர் திட்டம்’ தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி

image

TN அரசின் ‘<<17336334>>தாயுமானவர் திட்டம்<<>>’ தேமுதிக மற்றும் விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி என பிரேமலதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 2006 தேர்தலின்போது வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தேமுதிக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த திட்டத்தையே தற்போது TN அரசு முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ளதாக கூறிய பிரேமலதா, அன்று ஏளனமாக சிரித்தவர்கள் இன்று எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 12, 2025

தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

image

உலகிலேயே அதிக நீரை உறிஞ்சுவது இந்த டேட்டா செண்டர்கள் தான். AI-ஐ ட்ரெயின் செய்வதற்கும், பதில்களை கொடுக்கவைப்பதற்கும், தரவுகளை சேமிப்பதற்கும் டேட்டா செண்டர்கள் இன்றியமையாதது. உதாரணத்திற்கு, 100 மெகாவாட் கொண்ட டேட்டா செண்டர் ஒரு நாளுக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறதாம். எனவே AI-யிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு 10 மி.லி. தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே..

error: Content is protected !!