News September 26, 2024
தனி நபர் நூலக பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

வீடுகளில் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நூலகம் அமைத்து சிறப்பாக பராமரித்து வரும் தனி நபர்கள் தங்களது சிறந்த நூலக பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் தனி நூலகத்திற்கு அரசு சார்பில் ரூ.3000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு வருகிற 30ஆம் தேதிக்குள் நூலகம் குறித்த விவரங்களை 9150658877 என்ற எண்ணிற்கு அனுப்ப ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News August 16, 2025
நாகை: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் இங்கே <
News August 16, 2025
நாகை: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி! Apply Now

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <
News August 16, 2025
வேளாங்கண்ணி – முன்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் ஆக.26 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோல வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.