News September 26, 2024

பாம்பனில் தடையை மீறி கடக்கும் படகுகள்!

image

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது பாலம் பணிகள் முடிந்த நிலையில் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்தும் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்நேரத்தில் பாலத்தை கடக்கும் மீனவர்கள் மீது கனரக இரும்பு பொருட்கள் தவறி விழுந்தால் ஆபத்து ஏற்படும் என்பதால் மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. இதையும் மீறி சில படகுகள் கடந்து சென்ற வண்ணம் உள்ளன.

Similar News

News May 8, 2025

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வேலை

image

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனுக்கு நேர்முகத் தேர்வு நாளை (09-05-2025) நடைபெற உள்ளது. இதற்கு தகுதி உடையவர்கள் தங்களது சுய விவரங்களை (Resume) இன்று (மே.8) இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News May 8, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

error: Content is protected !!