News September 26, 2024

தீராத பிணிகள் தீர்க்கும் பாதாள லிங்கேஸ்வரர்!

image

தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட தோஷம் நீக்க திருமால் வழிபட்ட திருத்தலம் ராணிப்பேட்டையை அடுத்த கரிவேடு அரிபிரசாதேஸ்வரர் திருக்கோயிலாகும். இங்குள்ள இறைவனுக்கு பல்லவன் திரிபுவன வீரகண்டன் கற்றளி கோயில் எடுப்பித்தாக ஸ்தல புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, பாதாள லிங்கேஸ்வருக்கு அபிஷேகம் செய்து, வில்வம் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டால் தீராத பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.

Similar News

News August 12, 2025

தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு

image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

News August 12, 2025

வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

image

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.

News August 12, 2025

விஜய் வாய் திறந்துவிட்டாரா? தமிழிசை கிண்டல்

image

எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தமிழிசை, ‘பரவாயில்லையே ஒருவழியாக தம்பி விஜய் வாய் திறந்துவிட்டாரா’ என கிண்டலாக பதிலளித்தார். போராடும் தூய்மைப்பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியிருக்கிறார்; கூட்டம் வரும் கூட்டம் வரும்னு வெளிய வராம இருந்தா அப்புறம் எதுக்கு அவரு அரசியல் கட்சி தலைவர்? முதலில் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கட்டும் என்றார்.

error: Content is protected !!