News September 26, 2024
ஒரே குடும்பத்தில் 5 பேரை வெட்டிய 7 பேருக்கு சிறை

2008 ஆம் ஆண்டு குழித்துறை ராஜையன், அவரது குழந்தைகள் 3 பேர் மற்றும் தாயாரை முன்விரோதம் காரணமாக படந்தாலுமூடு சுரேந்திரன் உட்பட 7 பேர் சேர்ந்து வெட்டியதில் 5 பேரும் காயமடைந்தனர். நாகர்கோவில் மகிளா விரைவு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகளும், 4 பேருக்கு 2 ஆண்டுகளும் மற்றும் தலா ரூ.3000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News November 11, 2025
குமரி: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5..கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
குமரி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே நின்று கொண்டிருந்தபோது ராமசுப்பு (65 ) என்பவர் அவர்களை அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் ராமசுப்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முதியவர் ராமசுப்புக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News November 11, 2025
அஞ்சல் ஊழியர் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் – அதிகாரி தகவல்

குமரி கோட்டத்தில் தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாக வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகின்றது. எனவே மத்திய அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இன்று கூறினார்.


