News September 26, 2024
தாய் மகள் கொலை: இலங்கை அகதிக்கு இரட்டை ஆயுள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் காளியம்மாள்(58). இவரது மகள் மணிமேகலை(34). இவர்கள் இருவரையும் 2021ல் இலங்கை அகதி சசிக்குமார்(38) என்பவர் நகைக்காக எரித்து கொலை செய்தார். இந்த வழக்கில் சசிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொரு அகதி சுப்பிரமணியத்திற்கு 3 ஆண்டு சிறையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட் நேற்று(செப்.,25) தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News August 28, 2025
ராமநாதபுரம் பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

ராமநாதபுரம் மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.
News August 28, 2025
ராமநாதபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் https://www.drbramnad.net/ என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News August 28, 2025
BREAKING இராம்நாடு கார் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

ராமநாதபுரம் மாடக்கொட்டான் கிராமம் அருகே இன்று இரவு 9 மணியளவில் இசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பெண் ரீட்டாமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட இருவாகனங்களிலும் வந்த ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.