News September 25, 2024

ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் வாபஸ்

image

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வு திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, நாளை மறுதினம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்தனர். இன்று ஊரக வளர்ச்சித்துறை இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக, சங்க நிர்வாகிகள் ஜான் போஸ்கோ பிரகாஷ், வேல்முருகன், மகேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Similar News

News July 9, 2025

ஆத்துார் அருகே பிறந்த 18 நாளில் பெண் சிசு உயிரிழப்பு

image

சேலம்: ஆத்துார்,முல்லைவாடி, வடக்குகாடு, சக்தி நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாலியான ஜெயவேல் (24). இவரது மனைவி 18 நாளுக்கு முன் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இந்தநிலையில் நேற்று, அந்த குழந்தைக்கு முச்சுத்திணறல் ஏற்படவே, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தார். இது குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 8, 2025

சேலம்: திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்!

image

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வேலகவுண்டம்பாளையம் அருகே, எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்று வாகனத்தின் பேட்டரியின் அதிக வெப்பத்தால், திடீரென தீப்பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News July 8, 2025

‘அய்யா கேட்டால் இங்கேயே உயிரை விடுவேன்’

image

திண்டிவனத்தில் நடந்த பா.ம.க.வின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், “என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கோ, பொறுப்புகளை மாற்றுவதற்கோ அதிகாரமிக்கவர் மருத்துவர்.அய்யா மட்டுமே. 36 ஆண்டுகளாக அவர் காலில் கிடக்குறேன். அருளு உன் உயிர் வேண்டும் என்று அய்யா கேட்டார், இப்போதே உங்கள் முன் கழுத்தை அறுத்து உயிரை விடுவேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

error: Content is protected !!