News September 25, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியவர் கைது

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ராமதாஸ் என்பவரது பணப் பலன்களை விடுவிக்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கணக்கு பிரிவு அலுவலர் ஷேக் அகமது என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர். ரசாயனம் கலந்த பணத்தை கொடுத்த போது கையும் களமாக சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 11, 2025
திருத்தணி வந்த நடிகை ரோஜா

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், திரைப்பட நடிகை ஆர்.கே.ரோஜா திருத்தணி ஜாத்திரை திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். மேலும், அங்கிருந்தவர்கள் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
News September 11, 2025
திருவள்ளூரை வெளுக்க வரும் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று(செப்.11) காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.
News September 11, 2025
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (செப் 12) அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.