News September 25, 2024
நெல்லை சாதனையாளருக்கு முதல்வர் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று(செப்.25) தலைமைச் செயலகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சாந்தா சர்மிளா சந்தித்து, 5 நிமிடங்களில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் 12 திருக்குறளை எழுதி சாதனை படைத்ததற்காக India Book of Records வழங்கிய சான்றிதழையும், ஒரு நிமிடத்தில் 14 கண்ணாடி பிரதிபலிப்பு தமிழ் எழுத்துக்களை இரண்டு கைகளும் எழுதி சாதனை படைத்ததை காட்டி வாழ்த்து பெற்றார்.
Similar News
News July 5, 2025
நெல்லை இஸ்ரோ மையத்தில் ககன்யான் சோதனை வெற்றி

நெல்லை காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான எஸ்எம்எஸ்டிஎம் மாடல் இன்ஜின் 4-ம் கட்ட பரிசோதனை 130 வினாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ நேற்று (ஜூலை 4, 2025) தெரிவித்தது. முதல் கட்டமாக 30 வினாடிகள், இரண்டாம் கட்டமாக 100 வினாடிகள் சோதனை நடந்த நிலையில், இந்த வெற்றியால் இஸ்ரோ வட்டாரம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
News July 5, 2025
நெல்லையில் 100% மானியம் பெற அழைப்பு

தமிழக அரசு தொடங்கிய “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் விதைகள் மற்றும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடிகள் 100% மானியத்தில் வழங்கப்படும். மொத்தம் 34,350 காய்கறி விதைத் தொகுப்புகள், 21,150 பழச்செடிகள் விநியோகிக்கப்பட உள்ளன. விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
News July 5, 2025
மூலைக்கரைப்பட்டியில் கடன் வசூலிக்க சென்றவர் மீது தாக்குதல்

மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரின்ஸ், வண்ணாரப்பேட்டை வங்கியில் பெற்ற டிராக்டர் கடனின் மூன்று மாத தவணையை செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர் மாரியப்பன் நேற்று (ஜூலை.04) கடன் தொகை கேட்டு பிரின்ஸை அணுகியபோது, பிரின்ஸ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் பிரின்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்.