News September 25, 2024

கோட்சே போல பேசுகிறார் ஆளுநர்: அப்பாவு

image

ஆளுநர் ஆர்.என். ரவி கோட்சே போல பேசுவதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். மதசார்பின்மை ஐரோப்பாவில் தோன்றியது என்றும், ஆனால் பாரதம், இந்து மதம் ஆகிய இரண்டையும் பிரிக்க முடியாதென்றும் ஆளுநர் பேசியது குறித்து அப்பாவுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்ட 15,17 பிரிவை படித்து பார்த்தபிறகு பேச வேண்டும் என்றார்.

Similar News

News August 12, 2025

போலி சாமியார் போக்சோவில் கைது

image

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.

News August 12, 2025

முகமது அலியின் பொன்மொழிகள்

image

* நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
*பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தேன், ஆனால் ‘விட்டுவிடாதே. இப்போது கஷ்டப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஒரு சாம்பியனாக வாழ்’ என கூறிக்கொண்டேன் .
* நான் எங்கே போகிறேன் என தெரியும், நான் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி நான் இருக்க வேண்டியதில்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என்று சுதந்திரமாக இருக்கிறேன்.

News August 12, 2025

IPL அணி வாங்கும் எண்ணம்? சல்மான் கான் பதில்

image

ISPL என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்ற போது, IPL அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2008-ம் ஆண்டு IPL அணி வாங்குவதற்கு அழைப்பு வந்தது என்றும், ஆனால் அதனை அந்த சமயத்தில் ஏற்கவில்லை என்றார். அதை நினைத்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!