News September 25, 2024

கலெக்டர் பெயரில் போலி கணக்கு: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் பொதுமக்கள் அறிந்து பயன் பெறும் வகையில் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்க்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நபர்கள் புதுக்கோட்டை கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்குகளை உருவாக்கியுள்ளனர். இதுபோன்று போலி கணக்குகள் உருவாக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் 9445008146 தெரிவிக்கலாம்.

Similar News

News November 7, 2025

புதுகை: 150 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு!

image

பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 150 கிலோ புகையிலை பொருட்களை நீதிமன்ற உத்தரவுபடி நேற்று தேனூர்- தேனி கண்மாய் அருகே பொன் னமராவதி தாசில்தார் சாந்தா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News November 7, 2025

புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (நவ.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெரும் கறம்பக்குடி, நரங்கிப்பட்டு, தீத்தான்விடுதி, பிலாவிடுதி, கறம்பவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.06) இரவு 10 மணி முதல் இன்று (நவ.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!