News September 25, 2024

JOB ALERTS: இந்தோ திபெத் படையில் வேலை

image

இந்தோ திபெத் படையில் கான்ஸ்டபிள் நிலை பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 545 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வேலைக்கான விண்ணப்பபதிவு ஆன்லைனில் அக்டோபர் 8ம் தேதி தொடங்க உள்ளது. கடைசி தேதி நவம்பர் 6ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை recruitment.itbpolice.nic.in இணையதளத்தில் காணலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.

Similar News

News August 20, 2025

3 மணி நேரத்தில் பணம் டெபாசிட்.. விரைவில் அமல்!

image

காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. பணமாக்கும் செயல்பாட்டுக்கு CTS முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்றும் முறையை செயல்படுத்த வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing, Settlement on Realisation முறையில் இச்செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். அக்.4 முதல் அமலுக்கு வரும் புதிய முறையால் தனிநபர்கள், நிறுவனங்களின் சிரமம் குறையும்.

News August 20, 2025

சவுதியின் நவீன வான்வெளி மைதானம்!

image

2034 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக சவுதி அரேபியா ஒரு புதுமையான மைதானத்தை உருவாக்க உள்ளது. அந்நாட்டின் The Line ஸ்மார்ட் சிட்டியில், பாலைவனத்தில் இருந்து 350 உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் மைதானம் கட்டப்பட உள்ளது. 46,000 பேர் அமரும் வகையில், $1 பில்லியன் மதிப்பில் அந்த வான்வெளி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் 2027-ல் தொடங்கப்பட்டு 2032-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News August 20, 2025

ஒழுக்கம் பற்றி எனக்கு சொல்கிறீர்களா? அமித்ஷா

image

2010-ல் அமித்ஷா குஜராத் அமைச்சராக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார், அப்போது அவர் ஒழுக்கத்தை நிலைநாட்டினாரா என லோக்சபாவில் காங்., MP வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித்ஷா, உடனே ராஜினாமா செய்துவிட்டு, போலி வழக்கில் விடுதலையாகும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை, எனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் எனக் காட்டாமாக தெரிவித்தார்.

error: Content is protected !!