News September 24, 2024

இனி அனைத்து ஊர்களிலும் இசை ராஜாவின் கச்சேரி

image

தலைநகர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது மழை குறுக்கிட்டாலும், கலைந்து செல்லாத ரசிகர்கள் மழையில் நனைந்தபடியே இசையை ரசித்தனர். இதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, கும்பகோண மக்களின் ஆதரவை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 11, 2025

பொது இடங்களில் மது அருந்துவோரை தடுங்க: HC

image

பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் விரைவாக ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு பிரச்னை செய்வோர் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோரால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News August 11, 2025

ஆண்டில் 300 நாள்கள் தூங்கும் மனிதர்

image

நல்ல தூக்கத்துக்காக பலர் ஏங்க, ராஜஸ்தானை சேர்ந்த புர்க்காராமுக்கு (46) தூக்கமே சாபமாகிவிட்டது. தன் 23-வது வயது முதல் ‘ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட இவரால், ஒரு மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே விழித்திருக்க முடிகிறது. மீதி 25 நாள்கள் தொடர்ச்சியான தூக்கத்தில் கழிகிறது. இவர் தூக்கத்தில் இருக்கையில், குடும்பத்தினரே அவருக்கு உணவூட்டுவது, குளிக்க வைப்பது ஆகியவற்றை செய்கின்றனர்.

News August 11, 2025

ஆக. 21ல் தவெக மாநாடு நடப்பது உறுதி

image

தவெகவின் 2-வது மாநாட்டை ஆக.25-ம் தேதி மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக (விநாயகர் சதுர்த்தி) அன்றைய தேதியில் போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் மாநாட்டு தேதியை மாற்றுமாறு போலீஸ் அறிவுறுத்தியது. இதனையடுத்து, ஆக. 21-ல் மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்தார். அன்றைய தினத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ள தற்போது போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

error: Content is protected !!