News September 24, 2024
காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்

செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன் பிறகு, அக்.4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
Similar News
News August 11, 2025
5 பந்துகளில் அபார வெற்றி… அசத்தல்!

U-19 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றில், ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அர்ஜென்டினா – கனடா இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அர்ஜென்டினா அணி 19 ஓவர்கள் விளையாடி வெறும் 23 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கனடா பவுலர் ஜக்மதீப் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். சிறிய இலக்கை விரட்டிய கனடா அணி, வெறும் 5 பந்துகளில் 24 ரன்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது.
News August 11, 2025
பழைய ஓய்வூதிய திட்டம்: கருத்து கேட்கும் TN அரசு

வரும் 18-ம் தேதி முதல் செப்.9-ம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு கருத்து கேட்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News August 11, 2025
பொது இடங்களில் மது அருந்துவோரை தடுங்க: HC

பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் விரைவாக ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு பிரச்னை செய்வோர் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோரால் பெண்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.