News September 24, 2024
EX அமைச்சர் வைத்திலிங்கம் மீது மீண்டும் வழக்குப்பதிவு

ADMK EX அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-16இல் அமைச்சராக இருந்தபோது ₹33 கோடி வருமானத்திற்கு அதிகமாக (1058% அதிகம்) சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே, அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ₹28 கோடி லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
30 நாள் கெடு விதிக்கும் சட்டம்: யாருக்கு குறி?

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வை எதிர்க்கட்சிகள் முற்றாக எதிர்க்கின்றன. பிரதமரோ, முதல்வரோ அல்லது அமைச்சரோ – தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தாலே, அவர் பதவியிழப்பார் என்று இந்த மசோதா சொல்வதே காரணம். தேர்தலில் வீழ்த்த முடியாத மாநில அரசியல் தலைவர்களை, வழக்குகள் மூலம் சிறையில் தள்ளி வீழ்த்தும் மறைமுக வியூகமே இது என்கின்றனர் எதிர்கட்சிகள். உங்கள் கருத்து?
News August 20, 2025
காதல்.. டீச்சரை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்

மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
News August 20, 2025
கில் வரவால் சாம்சனுக்கு பின்னடைவு?

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இல்லாத போது மட்டுமே சாம்சனுக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறியது சாம்சனுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கில் இடம்பெற்றிருப்பதால், சாம்சன் உட்கார வைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் அவரது டி20 கரியர் கேள்விக்குறியாகியுள்ளது.