News September 24, 2024
காந்தி குறித்து அவதூறு: நூதன நிபந்தனையுடன் ஜாமின்

காந்தி குறித்து அவதூறு பதிவிட்டவருக்கு நூதன நிபந்தனையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. கல்யாண் சுந்தரம் என்ற இளைஞர் ஆபாச வார்த்தைகளுடன் காந்தியின் படத்தை Facebookஇல் பதிவிட்டதால், போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கில் அவர் ஜாமின் கோரிய நிலையில், மதுரை காந்தி மியூசிய நூலகத்தில் 15 நாள்கள் புத்தகத்தை அடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
Similar News
News August 11, 2025
மினிமம் பேலன்ஸை வங்கிகளே முடிவு செய்யலாம்: RBI கவர்னர்

அண்மையில் ICICI வங்கி, மினிமம் பேலன்ஸை ₹50,000-மாக <<17350157>>உயர்த்தியது<<>> வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மினிமம் பேலன்ஸ் நிர்ணயிப்பது அந்தந்த வங்கிகளின் விருப்பம். இது RBI வரம்புக்கு உட்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் என அரசு வலியுறுத்தும் நிலையில், மினிமம் பேலன்ஸை உயர்த்துவது சரியா?
News August 11, 2025
BREAKING: நவம்பர் 1, 2-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
News August 11, 2025
உண்மையான நட்பு எங்கே?

நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகிவிடமாட்டார்கள். `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உண்மையான நட்புணர்வு கொண்ட நண்பர்கள் இக்காலத்தில் குறைவே. நுகர்வு கலாசாரமும், அதற்கான பணநாட்டமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதர்களை தங்களுக்குள் நெருங்கிப் பழகவிடாமல் தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்காக, பொழுதை போக்கும் நட்பாகவே உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்க best friend யார்?