News September 23, 2024

எதிரியாக இருந்தாலும் உதவிய ரிஷப் பண்ட் ❤️❤️!

image

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரிபுதிரி வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸின் போது, ஒரு திசையில் எந்த பீல்டரும் இல்லாததை கண்ட ரிஷப் பண்ட், அதை வங்கதேச கேப்டன் சாண்டோவுக்கு சுட்டிக்காட்டினார். இதை ஏற்ற சாண்டோவும், அங்கு பீல்டரை நிறுத்தினார். “எதிரி யாராக இருந்தாலும் நமது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அஜய் ஜடேஜா கூறுவார். அதைதான் நானும் செய்தேன்” என்றார்.

Similar News

News August 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 427 ▶குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். ▶ பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

News August 14, 2025

அரசு ஊழியர்கள் திமுகவை எதிர்ப்பார்கள்: அன்புமணி

image

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எதிர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை இல்லை என்றார். இடஒதுக்கீடு வழங்கும்படி CM ஸ்டாலினை சந்தித்து தான் முறையிட்டதாகவும், ஆனால் அதனை தர அவருக்கு மனமில்லை என்றார்.

News August 14, 2025

அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம்

image

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியான சானியா சந்தோக் என்பவரை அவர் திருமணம் செய்யவுள்ளார். இருகுடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்தில் பங்கேற்றுள்ளனர். மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான ‘மிஸ்டர் பாவ்ஸ்’ என்ற சலூனை சானியா நடத்தி வருகிறார்.

error: Content is protected !!