News September 23, 2024

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெற்பாடுகள்

image

நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் அபாயமுள்ள 283 பகுதிகள் 42 மண்டல குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள், 3500 முதல் நிலை மீட்பாளர்கள், 200 பேரிடர் கால நண்பர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்புகளை மாவட்ட மற்றும் வட்ட அவசர கால கட்டுபாட்டு மையங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.

Similar News

News November 13, 2025

நீலகிரி: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

நீலகிரி மக்களே, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில், காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி ( PNB Local Bank Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்தில் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க

News November 13, 2025

நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், நாளை காலை 10 மணி முதல் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உள்ள, கீழ்த்தர கூட்ட அரங்கில், சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் முன்னாள் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க உள்ளனர் என, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

குன்னூரில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

image

குன்னுார் பழைய ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், உமாராணி தம்பதி. இவர்கள் கடந்த மாதம், 27ல் அன்னுாரில் உள்ள உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று, 29ல் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ‘நேற்று வீட்டில் உள்ள நகையை அடமானம் வைக்க, பீரோவில் பார்த்த போது, 31 பவுன் வரை நகைகள் காணவில்லை,’ என, குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!