News September 23, 2024

குமரி வரும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

image

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து குமாரகோவில் முருகன், தேவாரக்கெட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் அக்.,1ஆம் தேதி ஊர்வலமாக புறப்பட்டு 3ஆம் நாள் திருவனந்தபுரம் அடையும். இந்நிலையில், பத்மநாபபுரம் அரண்மனையில் நடக்கும் உடைவாள் மாற்றுதல், விக்ரக புறப்பாடு நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், 2 மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Similar News

News August 19, 2025

குமரி இளைஞர்களே, இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க

image

கன்னியாகுமரி இளைஞர்களே, நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக. 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 13 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொடர்புக்கு – 7904715820, 8270865957. வேலை தேடும் இளைஞர்களுக்காக உடனே SHARE பண்ணுங்க.

News August 19, 2025

குமரி: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (18.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோட்டார், நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் SSI மற்றும் HC நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் 04652-220417 மற்றும் அலுவலர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News August 18, 2025

குமரி மாவட்ட ஆட்சியரிடம் மடிக்கணினி பெற்ற மாணவன்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) உயர்கல்வி பயில உள்ள மாணவன், மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு ஆட்சியர் அழகு மீனா மடிக்கணினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!