News September 23, 2024

கட்டில்களை வைத்து சீல்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

image

தொண்டாமுத்தூர் பகுதியில் இன்று கோவை எஸ்பி கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குபேரபுரி டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை கண்டு மூவரை கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து சீனிவாசன், அர்ஜுன், வினோத் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். பின், கோவை கலெக்டர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாரை வருவாய்த்துறையினர் கட்டிலை வைத்து மறைத்து சீல் வைத்த சம்பவத்தை கண்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Similar News

News August 7, 2025

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கண்காட்சி

image

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் 11 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சியர், பவன்குமார் திறந்து வைத்து பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06.08.2025) வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், மண்டல அளவில் பதிவுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!