News September 23, 2024

புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

image

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த x பக்கத்தில், இந்தியாவின் நெய்பர்ஹூட் ஃபர்ஸ்ட் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்றார். மேலும் பிராந்தியத்தின் நலனுக்காக உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Similar News

News August 11, 2025

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை என்ன?

image

‘மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற பெயரில் ஆக.1 முதல் தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்: *மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். *10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். *மாநகராட்சியின் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

News August 11, 2025

10வது நாள்… வலுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

image

சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், நகரின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3,000 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ளது. மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து போரட்டம் தொடங்கிய நிலையில், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

News August 11, 2025

இன்றே கடைசி: AIIMS-ல் 3,500 பணியிடங்கள்

image

நாடு முழுவதும் உள்ள AIIMS ஹாஸ்பிடல்களில் 3,500 நர்ஸிங் ஆபிஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். B.Sc Nursing அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 முதல் 30. SC/ST-க்கு 5 ஆண்டுகளும், OBC-க்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. Preliminary தேர்வு வரும் செப்.14, Mains தேர்வு செப்.27 நடைபெறும்.

error: Content is protected !!