News September 22, 2024

ஒரே ஆண்டில் நாய் கடியால் 20,000 பேர் பலி

image

இந்தியாவில் ஆண்டுதோறும், 20,000 பேர் நாய் கடியால் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் (59,000) 35% ஆகும். 2021ல் இருந்து நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளது.

Similar News

News August 10, 2025

இது நல்லதல்ல: திருமாவை எச்சரிக்கும் OPS

image

திராவிட அரசியலில் எம்ஜிஆர் பார்ப்பனியத்தை புகுத்தியதாக விமர்சித்த திருமாவுக்கு OPS கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயல‌லிதா குறித்த திருமாவளவனின் கருத்து அவருக்கு நல்ல‌தல்ல, அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது என்று எச்சரித்த OPS, கூடுதல் தொகுதிக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் திமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதாகவும், அதிமுக தலைவர்களை தாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

News August 10, 2025

வாக்காளர்கள் நீக்கத்திற்கான காரணம் கூற முடியாது: ECI

image

பிஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என SC-ல் ECI பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டியது கட்டாயமல்ல எனவும் நீக்கத்திற்கான காரணம் குறித்து கூறமுடியாது எனவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம்(ECI) இந்த முடிவை தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News August 10, 2025

எதுக்கு! டாப் 7 வித்தியாசமான, விசித்திர சட்டங்கள்!

image

கேட்டால் வித்தியாசமாக, விசித்திரமாக தோன்றும். ஆனால், உலகின் பல இடங்களிலும் அப்படியான சில சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அப்படி உலகின் வித்தியாசமான சட்டங்களில் ‘டாப் 5’ மேலே உள்ள அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். நீங்கள் கேள்விப்பட்ட சில விசித்திரமான சட்டங்களை கமெண்டில் பதிவிடவும். இதில் எந்த சட்டம் உங்களுக்கு ரொம்ப விசித்திரமாக தெரிகிறது.

error: Content is protected !!