News September 22, 2024

இந்த விஷயத்துல உ.பி. தான் முதலிடம்

image

2022ஆம் ஆண்டில் SC மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 51,656 வழக்குகள் பதிவான நிலையில், உ.பியில் மட்டும் 12,287 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது மொத்த வழக்குகளில் 23.78% ஆகும். அடுத்தபடியாக 8,651 வழக்குகளுடன் ராஜஸ்தான் 2ஆம் இடத்தில் உள்ளது. 7,732 வழக்குகளுடன் மத்திய பிரதேசம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 13 மாநிலங்களில் 97% வழக்குகள் பதிவாகியுள்ளது.

Similar News

News August 10, 2025

எதனால் நிறுத்தப்பட்டது ISL? முழு விவரம்

image

கால்பந்தை பிரபலப்படுத்த AIFF(இந்திய கால்பந்து சம்மேளனம்) ரிலையன்ஸின் FSDL (Football Sports Development Limited) நிறுவனத்துடன் 2010-ல் 15 வருட ஒப்பந்தம் போட்டது. இதற்கு ₹50 கோடியை AIFF-க்கு FSDL கொடுக்க வேண்டும். 2014-ல் தொடங்கப்பட்ட ISL பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், டிசம்பரில் முடியும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க FSDL தயாராக இல்லை. அதனால் தொடர் நடக்குமா என்ற இழுபறி நீடிக்கிறது.

News August 10, 2025

நேற்று அன்புமணி.. இன்று ராமதாஸ்..

image

பூம்புகாரில் இன்று மாலை 3 மணிக்கு ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. நேற்று இரவே மாநாட்டு திடலுக்கு சென்ற ராமதாஸ் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2025

ஏன் கோயிலுக்கு சென்றால் சில நேரங்கள் அமர வேண்டும்!

image

சிவன் கோயிலுக்கு சென்றால், சில நிமிடமாவது அமர்ந்துவிட்டு வரவேண்டும். காரணம், சிவன் கோவிலில் இருந்து எதையுமே வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்பதால், சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு புறப்பட வேண்டும். ஆனால், பெருமாள் கோயிலுக்கு சென்றால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடலாம். காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்கினால், வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். SHARE IT.

error: Content is protected !!