News September 22, 2024
கள்ளக்குறிச்சி அருகே விபத்து; பெண் மரணம்

மேல்நாரியப்பனூரை சேர்ந்த அம்மணி அம்மாள் ஆத்தூரில் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக வி.கூட்ரோடு பகுதியில் பாலத்தின் கீழ் பேருந்து ஏறுவதற்காக இன்று நடந்து செல்லும் போது சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்து திரும்பும் போது அம்மணி அம்மாள் மீது ஏறி இறங்கி நிற்காமல் சென்றுள்ளது. இதில் அம்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News September 8, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய செப்டம்பர் 8 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ மதிப்பீட்டில் வெங்காயம் ரூபாய் 30 தக்காளி ரூபாய் 25 உருளைக்கிழங்கு ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 30 வெண்டைக்காய் ரூபாய் 40 சுரைக்காய் ரூபாய் 20 அவரைக்காய் ரூபாய் 60 கத்தரிக்காய் ரூபாய் 40 பச்சை மிளகாய் ரூபாய் 50 முட்டைக்கோஸ் ரூபாய் 25 என விற்பனை ஆகிறது என்று நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார்.
News September 8, 2025
கள்ளக்குறிச்சி: சிலிண்டர் மானிய நிலையை எளிதாக அறிய வழி

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News September 8, 2025
கள்ளக்குறிச்சி பெயர் கரணம் தெரியுமா…?

இந்தப் பகுதியில் முன்பு அதிகமாகக் கள்ளிக் காடுகள் இருந்ததால், அது “கள்ளிக்காடு” என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கள்ளக்குறிச்சி என்று மாறியிருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. மேலும் இன்னொரு காரணமாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வசித்து வந்ததாலும், அந்தக் காலத்தில் அவர்கள் குடிசைகளில் வசித்து வந்ததாலும், “கள்ளர் குடிசை” என்று அழைக்கப்பட்டு,பின்னர் அது “கள்ளக்குறிச்சி” என்று மாறியது.