News September 22, 2024
செப்.26ஆம் தேதி அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம்

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் செப்.26 ஆம் தேதி மாலை, 4:00 மணிக்கு அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு செப்.25க்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம். மேலும் செப். 26ல் நடக்கும் குறைதீர் முகாமில் பங்கேற்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஓரகடம் மற்றும் வெள்ளை கேட் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 22) முதல் இன்று (ஆகஸ்ட் 23) விடியற்காலை வரை காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
News August 23, 2025
காஞ்சிபுரம்: மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
காஞ்சிபுரம்: மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!