News September 22, 2024
மதுரையில் மேலும் ஒரு நான்கு வழிச்சாலை

மதுரை மாநகரில், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மதுரை-சிவகங்கை சாலை உள்ளது. இச்சாலையில் அரசு மருத்துவமனை, அண்ணா பஸ் நிலையம், ஆட்சியர் அலுவலகம் போன்றவை உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆட்சியர் அலுவலகம் ஜங்ஷன் – கோமதிபுரம் 5வது தெரு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்த 60 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
மதுரை: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க?

மதுரை மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், அதன் Bill-யை வைத்து சட்டப்படி மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் இழப்பீடு பெற முடியும். அல்லது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரியை (94450-00335) அணுகலாம். SHARE பண்ணவும்
News August 24, 2025
உசிலம்பட்டி விநாயகர் சிலைகள் ஆய்வு

உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறதா, நீரில் கரையும் தன்மை, வர்ணப்பூச்சுகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பூச்சு உள்ளதா என்பது குறித்து உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், டி.எஸ்.பி., சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
News August 24, 2025
மதுரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தேவாங்கு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர், குன்னாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருகின்றன. தேவாங்கு சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு உள்ள சூழலில் சாலை விபத்துகளில் இவை அடிக்கடி சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.