News September 21, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: முக்கிய நபர் சிக்கினார்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி அப்பு கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த அப்பு, ஜூலை 5க்கு பிறகு தலைமறைவானார். முக்கிய சாட்சியமாக கருத்தப்பட்ட அவரை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது. இந்நிலையில் டெல்லியில் பதுங்கியிருப்பதாக அவரை, தனிப்படை போலீஸ் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வருகிறது. அவரிடன் விசாரணை நடத்தினால், மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News August 21, 2025

தவெக மாநாட்டில் 40 அடி உயர கொடிக்கம்பம்

image

தவெக மாநாட்டில் புதிதாக 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நேற்று பிற்பகல் <<17463695>>100 அடி உயர கொடிக்கம்பத்தை<<>> கிரேன் கொண்டு நிறுவ முயன்ற போது கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் கொடிக்கம்பம் நிறுவும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடைக்கு அருகே 40 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவியுள்ளனர். புதிய இடத்தை N.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் பார்வையிட்டனர்.

News August 21, 2025

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: ரஹானே

image

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூர் போட்டிகளை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 2023 – 2024 ரஞ்சி கோப்பை வின்னிங் கேப்டனான இவர், இரானி டிராபியையும் வென்றார். இதனால் 2026 IPL சீசனில், ரஹானே KKR அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News August 21, 2025

இன்னும் சற்றுநேரத்தில் … ரெடியா இருங்க

image

தவெக மாநாடு சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல், விஜய்யை காண தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், 4 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே (3 மணிக்கு) மாநாட்டு மேடைக்கு விஜய் வருகிறார். இதன் காரணமாக தற்போது ஆதவ், என்.ஆனந்த் வாக்கி டாக்கியுடன் மாநாடு மேடைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர்.

error: Content is protected !!