News September 21, 2024
புதுச்சேரி முதலமைச்சர் நேரில் ஆய்வு

புதுச்சேரியில் தற்போதைய துணைநிலை ஆளுநர் மாளிகை புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்காலிக துணைநிலை ஆளுநர் இல்லம் மற்றும் அலுவலகத்தை பழைய சாராய ஆலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி இன்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News September 15, 2025
காரைக்காலில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் (15.09.2025) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும். மேலும் இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
News September 14, 2025
புதுச்சேரி: தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சி

புதுச்சேரி அரசின் சுற்றுலா துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறையுடன், உலக அமைதி அறக்கட்டளை, ஸ்ரீ அரவிந்தோ மந்திர், நபியோத்வீப் அமைப்புகள் இணைந்து (செப்டம்பர் 14) இன்று தனியார் ஓட்டலில் ஒருநாள் தேசிய கருத்தரங்கை நடத்தின. முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்கள்.
News September 14, 2025
புதுவை: எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா பொட்டலங்கள்!

தெலுங்கான மாநிலம் கச்சிகுடாவில் இருந்து புதுவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில், போலீசார் ரெயில் பெட்டிகளை சோதனை செய்த போது சாக்கு பை ஒன்று கிடந்தது. போலீசார் அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.