News September 21, 2024

கோவை: டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்

image

கோவை கண்ணப்ப நகர் பகுதியில் 5வதாக திறக்கபட உள்ள டாஸ்மாக்கடையை திறக்க கூடாது கன்று மதிமுக ஒட்டுநர் தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக் கொண்டு உண்ணாவிரதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த இரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதிமுக ஓட்டுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து விசாரணைக்காக இன்று காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Similar News

News August 7, 2025

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கண்காட்சி

image

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் 11 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சியர், பவன்குமார் திறந்து வைத்து பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

image

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06.08.2025) வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், மண்டல அளவில் பதிவுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!