News September 21, 2024

கோவை: துப்பாக்கி சூடு எப்போது? வழக்கின் பின்னணி?

image

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த சக்தி பாண்டி கடந்தாண்டு கோவையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகையை சேர்ந்த ஆல்வின் கைது செய்யப்பட்டார். பின், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கோவை கொடிசியாவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Similar News

News August 23, 2025

கேரளா ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

image

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஆக.24 ஆம் தேதி ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில், திப்ரூகா் – கன்னியாகுமரி விரைவு ரயில், பாட்னா- எா்ணாகுளம் விரைவு ரயில், தாம்பரம் – மங்களூரு விரைவு ரயில் கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா் – போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது

News August 23, 2025

கோவை: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

image

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>-1 <<>>இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 23, 2025

மறந்துடாதீங்க – இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ( ஆக.23) காலை 8 மணியளவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!