News September 21, 2024

கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் துண்டிப்பு

image

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் சுமார் இரவு 11 மணியிலிருந்து கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இரவு பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, காலையில் வேலைக்கு செல்வோர் சிரமத்தை அடைந்துள்ளனர். மழை நீர் தேங்கி, சாலைகளில் கழிவு நீரோடு கலந்து ஓடுகின்றது. ஊரப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Similar News

News August 18, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 18, 2025

மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள்

image

மாமல்லபுரம் கடலில் நேற்று (ஆக. 18) தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் இயக்குனர் அப்ரஜிதா சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி குழுவினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கடற்கரை கோயில் அருகில் படகில் சென்று நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் கடலில் மூழ்கிய 6 கோவில்களில் 1 கோயிலின் தடயங்கள் பாசியுடன் உள்ள கருங்கல் கட்டுமானங்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

News August 18, 2025

செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <>இந்த UIDA <<>>என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் Retrieve Aadhaar என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் நம்பர் மற்றும் captcha, OTP எண்ணை பதிவிட்டு மீட்டெடுக்கலாம்.1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!