News September 21, 2024

பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய அழைப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆண்டுகள் கடந்து பிறப்பு பதிவுகளுக்கு குழந்தையின் பெயரினை பதிவு செய்து பிறப்பு சான்று பெற 5 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்த கால அவகாசம் 31.12.2024 உடன் முடிகிறது. எனவே, குழந்தையின் பெயர் இன்றி பிறப்பு சான்று பெறப்பட்டிருந்தால் பெயரை பதிவு செய்து பிறப்பு சான்று பெறவேண்டும். இதற்கான கால அவகாசம் இனி நீட்டிக்கப்படாது என ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 28, 2025

ராமநாதபுரம் பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

image

ராமநாதபுரம் மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.

News August 28, 2025

ராமநாதபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் https://www.drbramnad.net/ என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும். ரூ‌.10,00 முதல் 60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

BREAKING இராம்நாடு கார் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

image

ராமநாதபுரம் மாடக்கொட்டான் கிராமம் அருகே இன்று இரவு 9 மணியளவில் இசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பெண் ரீட்டாமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட இருவாகனங்களிலும் வந்த ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!