News September 20, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் தலா 25 பள்ளி, கல்லூரிகளில் ஓவியம் வரைதல், கட்டுரை போட்டிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளை நவம்பர் மாதத்திற்குள் முடிக்கவும், வெற்றி பெறுபவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி பரிசு வழங்கப்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 12, 2025

கடலூர்: தவறி விழுந்து பேருந்து ஓட்டுநர் பலி

image

சங்கிலி குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று இரவு ராமாபுரம் பைபாஸ் சாலை வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன் உடலை கைப்பற்றிய முதுநகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2025

கடலூர்: பட்டப் பகலில் கொள்ளை

image

திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டி தெருவில் பூக்கடை செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் இல்லத்தில் மர்ம நபர் ஒருவர் பட்டப் பகலில் வீட்டு லாக்கர் உடைத்து வெள்ளி மற்றும் தங்க நகைகள் பித்தளை பாத்திரங்கள் மற்றும் வெள்ளி விளக்கு போன்ற பொருட்கள் திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 11, 2025

கடலூர்: ரூ.29,735 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>> .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!