News September 20, 2024

நெய்யில் கலப்படம் என்பது கட்டுக்கதை: ஜெகன் மோகன்

image

திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் என்பது கட்டுக்கதை என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கூறியுள்ளார். ‘லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்க்காக 6 மாதங்களுக்கு ஒருமுறை டெண்டர் விடப்பட்டு, நெய் கொண்டுவரப்படும் டேங்கர்கள் NABL சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பின், 3 விதமான சோதனை நடத்தப்படும். இப்படி இருக்கையில் நெய்யில் கலப்படம் என கூறுவது கட்டுக்கதை’ என கூறியுள்ளார்.

Similar News

News August 22, 2025

அதிமுக – பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணி: வன்னியரசு

image

அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பார்ட்னராக விஜய் செயல்படுகிறார் என வன்னியரசு விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு வைக்கும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். அதை செய்யாமல் இபிஎஸ் முன்மொழிந்ததை வழிமொழிந்தனர் மூலம் அதிமுகவுடன் தவெக மறைமுக கூட்டணி வைத்திருப்பது அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

ஆவணி அமாவாசையான இன்று என்ன செய்யலாம்?

image

ஆவணி அமாவாசையான இன்று வழங்கப்படும் தானங்கள் நமக்கு மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும் நற்கதியையும், புண்ணியங்களையும் வழங்குமாம். ஆதலால் இன்றைய நாளில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையோ அல்லது அன்னதானமாகவோ வழங்கலாம். கோயிலுக்கு நெய் நிரப்பிய விளக்குகள், எண்ணெய், வெல்லம், பருப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகள் ஆகியவற்றை வழங்கினால் முன்னோர்களின் ஆசி கிட்டும் என நம்பப்படுகிறது.

News August 22, 2025

எல்லாராலும் MGR ஆக முடியாது: விஜய் பற்றி ஜெயக்குமார்

image

தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் எம்ஜிஆர் குறித்து விஜய் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய EX அமைச்சர் ஜெயக்குமார், இது ஒரு தேர்தல் யுக்தி என்றும், வாக்குகளை பெறுவதற்காக அண்ணா, எம்ஜிஆர் பெயர்களையும், படங்களையும் பயன்படுத்துவதாக விமர்சித்தார். எல்லோராலும் MGR, ஜெயலலிதா ஆகிவிட முடியாது எனக் கூறிய அவர், இரட்டை இலைக்கு வாக்களித்த கை, ஒரு காலத்திலும் வேறு கட்சிக்கு வாக்களிக்காது என்றார்.

error: Content is protected !!