News September 19, 2024
(கன்னியாகுமரி-சென்னை) ஜபல்பூர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

நாகர்கோவில் – கொச்சுவேளி பயணிகள் ரயிலை நிலம்பூர் எக்ஸ்பிரஸாக மாற்றும் திட்டத்தால் சாதாரண பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என மாவட்ட பயணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி-சென்னை-ஜபல்பூர் சிறப்பு ரயில் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
குமரி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே நின்று கொண்டிருந்தபோது ராமசுப்பு (65 ) என்பவர் அவர்களை அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் ராமசுப்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முதியவர் ராமசுப்புக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News November 11, 2025
அஞ்சல் ஊழியர் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் – அதிகாரி தகவல்

குமரி கோட்டத்தில் தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாக வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகின்றது. எனவே மத்திய அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இன்று கூறினார்.
News November 11, 2025
குமரியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி இரவு ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது. டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள் எஸ்ஐபி இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் இன்று இரவு முழுவதும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.


